Wednesday, October 22, 2008

மகா BHARATH

மகாபாரதத்தில் உள்ள எத்தனையோ கிளைக் கதைகளில் இதுவும் ஒன்று.


பாரதப் போரின் 17ஆம் நாள். கர்ணன் இறந்து விட்டான். அன்று இரவு பாண்டவர்களின் கூடாரமே மகிழ்ச்சியின் எல்லைக்கு செல்வதற்கு பதிலாக சோகமாகவே இருந்தது. அதற்கு காரனம் குந்தி. அவள் கர்ணனின் பிணத்தை மடியில் வைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறாள். உண்மையை அறிந்த பாண்டவர்களோ சோகத்தின் எல்லையில் இருக்கிறார்கள்.


அர்ஜுணனோ இன்னும் ஒரு படி மேலே போய் கிருஷ்ணனிடம், "உண்மை அனைத்தும் அறிந்தும் என்னை இப்படி சகோதரனை கொன்ற பாவத்திற்கு ஆளாக்கி விட்டீர்களே. இது நியாயமா? என் வாயாலேயே பல முறை எனது மூத்த சகோதரனை தேரோட்டி மகன் என்று குறிப்பிடுள்ளேனே, இந்த பாவம் என்னை விட்டு நீங்குமா? ஒவ்வொரு முறையும் பலர் அவரை தேரோட்டி மகன் என்று குறிப்பிட்ட போதும் அவரது மனம் என்ன பாடு பட்டிருக்கும்?" என்றெல்லாம் பலவாறு புலம்பினான். அதற்கு கிருஷ்ணனோ எதுவும் சொல்லாமல் புன்னகை பூத்த முகத்துடன் இருந்தான்.


இதைக் கண்ட தருமன் கிருஷ்ணனிடம், "அய்யா! எனது சகோதரன் இவ்வாறு புலம்புவதை கண்டும் புன்னகை சிந்தும் உமக்கு கல் நெஞ்சோ?" என்றான்.


உடனே கிருஷ்ணன், "தருமா! சற்று பொரு. அர்ஜுணன் தனது சகோதரனை கேவலப்படுத்தி விடோமே என்று கவலைப் படுகிறான். ஆனால் தனது சகோதரனை வேறொருவர் மகன் என்று கூறி உண்மையில் அவன் கேவலப்படுத்தியது அவனது தாயாரைத்தான்." என்றான்.


இக்கதை உண்மையோ பொய்யோ. இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது நல்ல நீதி. நாம் பல நேரங்களில் அடுத்தவருக்கென்று செய்யும் தீங்குகள் நமக்கே தீங்காக முடியும்.


இதை வள்ளுவப் பெருந்தகை,


"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்"


என்கிறார்.


இளங்கோவடிகள்,


"ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்"


என்கிறார்.


நாமும் நம்மால் முடிந்த வரையில் மனதாலும், சொல்லாலும், செயலாலும் மற்றவருக்கு நன்மையே செய்வோமாக.

No comments: