Wednesday, May 9, 2012

http://www.youtube.com/watch?v=bZRqo-ODv70
தமிழுக்கு முதல் மரியாதை




அடுத்த திங்கள் தொடங்கப்போகும் ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே தயாராகிவிட்டது இலண்டன் மாநகரம்.வரவேற்பின் ஒரு அம்சமாக, உலகிலிருந்து வரும் பார்வையாளர்களை வரவேற்க ஒரு ஒளிக்காட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். இலண்டனில் வாழும் அனைத்து சமூக மக்களும் தத்தமது மொழியில் முதலில் வணக்கம் என்று,பின்னர் வரவேற்கிறோம் என்றும் கூறுகிறார்கள். இதில் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா? இந்த ஒளிக்காட்சி தொடங்கும் போதே முதன்முதலாக வணக்கம் கூறுவது ஒரு தமிழ்ச் சிறுவன்தான். வணக்கம்என்று அழகு தமிழில் அவன் துள்ளிக் குதித்துச் சொல்லுகிறான். தொடர்ந்து பலரும் வணாங்கியபின்லண்டன் மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று ஒரு தமிழர் கூறுகிறார். மெல்லிய பின்னணி இசையுடன் பாடல் லண்டனைச் சுற்றிப் படமாக்கப்பட்டிருக்கிறது

No comments: