Tuesday, June 16, 2009

indian railways

  • இந்தியாவில் முதல் ரயில் பம்பாய்க்கும் தானேக்கும் இடையே 16-04-1853 ல் விடப்பட்டது. சுல்தான், சிந்த், சாகிப் என்ற மூன்று எஞ்சின்கள் 34 கி.மீ. தூரத்தைக் கடந்தன. இந்த தூரத்தைக் கடக்க 57 நிமிடம் ஆகியது.

  • அப்போது க்ரேட் பெனின்சுலர் ரயில்வே என்று அழைக்கப்பட்டது. சிறிய மரக்குடில் ஒன்றே (போரி பந்தர்) பம்பாயில் ரயில் நிலையமாக இருந்தது. இப்போது அதுவே ப்ரம்மாண்டமான சத்ரபதி சிவாஜி டெர்மினல்(விக்டோரியா டெரிமினஸ்.)

  • முதன் முதலில் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருப்புப் பாதைகள் 1853ல் போடப்பட்டன.

  • முதல் ரயில்வே பாலம் 1854 ம் ஆண்டில் தானேயில் கட்டப்பட்டது.

  • முதல் மின்சார ரயில் பம்பாய் வி. டி. க்கும் குர்லாவிற்கும் இடையே 1925 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடப்பட்டது.

  • ஹிமாசாகர் எக்ஸ்பிரஸ் ஜம்மு தாவிக்கும் கன்யாகுமரிக்கும் இடையே உள்ள 3738 கி. மீ. தூரத்தை 66 மணி நேரத்தில் கடக்கிறது. இதுவே இந்தியாவில் மிக நீண்ட இரயில் பயணம்.

  • சில்லிகுரிக்கும் டார்ஜிலிங்குக்கும் இடையே விடப்படும் ரயில் பொம்மை ரயில் என்று அழைக்கப்படுகிறது. இது கடக்கும் தொலைவு 24 கி.மீ. தான்

  • கரக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரமே உலகத்தில் மிகவும் நீளமானது. இதன் நீளம் 833 மீட்டர்.

  • ஸ்ரீ வெங்கடநரசிம்மராஜு வாரிப் பேட்டா என்ற ஸ்டேஷன் மிக நீளமான பெயருடையது.

  • மிகச் சுருக்கமான பெயருடைய ஸ்டேஷன் இப். இது ஒரிஸாவில் இருக்கிறது.

  • மிகப்பெரிய டனல் (குகைப்பாதை) கொங்கன் ரயில்வேயில் ரத்னகிரி ஸ்டேஷனில் உள்ளது இதன் நீளம் 6.5 கி.மீ.

  • மிகப்பெரிய ரயில்வே பாலம் கல்கத்தா - தில்லி வழியில் உள்ள டெஹ்ரி-ஆந் சோனே பாலம். இது சோனி நதி மீது கட்டப்பட்டது இது 3064 மீ. நீளமுடையது.

  • பூமிக்கடியிலான முதல் மெட்ரோ ரயில் கல்கத்தாவில் 1984ல் போடப்பட்டது.

  • முதல் அதிவிரைவு ரயில் தில்லிக்கும் ஹவுராவிற்கும் இடையில் மார்ச் 69ல் விடப்பட்டது.

  • முதல் குளிப்ர்பதன வசதி ரயில் பம்பாய்க்கும் தில்லிக்குமிடையே 1990ம் ஆண்டு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொருத்தப்பட்டது.

  • முதல் பெண் எஞ்சின் ட்ரைவர் சுரேகா போன்ஸ்லே- 1990ல் பம்ம்பாயில் பணியில் சேர்ந்தார்.

  • சிந்த்-பஞ்சாப்-தில்லி ரயில்வே (லாகூர்)முதன் முதலில் பிளாட்பார்ம் டிக்கெட்டை அறிமுகப்படுத்தியது.

  • கழிப்பறை வசதிகள் ரயிலில் 1891ல் அறிமுகப்படுதப்பட்டன.

  • நீராவி எஞ்சின் தயாரிப்பு 1972 ல் நிறுத்தப்பட்டது.

  • தில்லியில் ஒரு தேசிய ரயில் மியூசியம் 1977லிருந்து இயங்குகிறது.

  • இந்தியாவில் டீஸல் எஞ்சின்கள் வாரணாசியிலும், மின்சார எஞ்சின்கள் சித்தரஞ்சனிலும் ரயில் கோச்சுகள் பெரம்பூர் ஐ.சி.எப். பிலும், பஞ்சாப் கபூர்தலாவிலும் தயாரிக்கபடுகின்றன.

  • மின்சார எஞ்சின் தயாரிப்பில் இந்தியா 5வது இடத்தைப் பெற்றுள்ளது.

  • நிர்வாக வசதிக்காக ரயில்வே 17 மண்டலங்களாகப் பிரிக்கபட்டிருக்கிறது. இப்போது மொத்தம் 62000 கி.மீ. இருப்புப்பாதையால் இணைக்கப்பட்டிருக்கிறது. 16000 கி.மீ. அகலப்பாதை மின்சார மயமாக்கப்பட்டுளது.

  • 1.6 மில்லியன் பணியாளர்கள் இந்திய ரயில்வேயில் பணி புரிகிறார்கள். ஒரே நிர்வாகத்தின் கீழ் இவ்வளவு பணியாளர்கள் உள்ளது இந்தியன் ரயிவேயில்தான். தினம் 13000 ரயில்கள் விடப்படுகின்றன.

  • இருப்புப்பாதைகள் broad, metre, Narrow gauge என்ற மூன்று வகையில் அமைந்துள்ளன. இந்திய ரயில்வே ஆசியாவில் முதல் இடத்தையும் உலகத்திலேயே இரண்டாவது இடத்தையும் பெற்றிருக்கிற

No comments: